×

பன்றிகளை அப்புறப்படுத்த கோரிக்கை

 

வருசநாடு, ஏப். 30: வருசநாடு பகுதி தெருக்களில் சுற்றித்திரியும் பன்றிகளை அப்புறப்படுத்த வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தேனி மாவட்டம் வருசநாடு கிராமத்தில் ஓம்சக்தி கோவில், பெருமாள்கோவில் உள்ளிட்ட தெருக்களில், பன்றிகள் அதிகளவில் சுற்றித் திரிகின்றன. மேலும் அவைகள் பல இடங்களில் சாக்கடைகளைத் தோண்டி அசுத்தப்படுத்தியும் வருகின்றன. இதனால் இப்பகுதியில் வைரஸ் காய்ச்சல் போன்ற தொற்றுநோய்கள் பரவி வருவதாக கிராம மக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.

மேலும் இது குறித்து ஊராட்சி நிர்வாகத்திடம் பலமுறை தகவல் தெரிவித்தும் உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை என வேதனை தெரிவித்துள்ளனர்.இது குறித்து கிராம மக்கள் கூறுகையில், தெருக்களில் சுற்றித்திரியும் பன்றிகளால் சிறு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை காய்ச்சல் உள்ளிட்ட தொற்றுநோயால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். ஆகையால் தெருக்களில் சுற்றித்திரியும் பன்றிகளை அப்புறப்படுத்த மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

The post பன்றிகளை அப்புறப்படுத்த கோரிக்கை appeared first on Dinakaran.

Tags : Varusanadu ,Theni district ,Omshakti temple ,Perumal temple ,Dinakaran ,
× RELATED விவசாயத்துக்கும், குடிநீருக்கும்...